அனுமதி இல்லா காப்பகம்-69 சிறுவர்கள் மீட்பு
வேலூர்:வேலூர் அருகே அரசு அனுமதியின்றி செயல்பட்ட குழந்தைகள் காப்பகத்தில் இருந்த 69 சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.
வேலூர் அருகே அரியூர் என்ற இடத்தில் தினா சேவா டிரஸ்ட் குழந்தைகள் காப்பகம் என்ற பெயரில் ஒரு காப்பகம் செயல்பட்டு வந்தது. இந்த காப்பகம், அரசு அனுமதி பெறாமலும், உரிய முறையில் பதிவு செய்யாமலும் இயங்கி வந்துள்ளது.
மேலும் இங்கிருந்த குழந்தைகளை துன்புறுத்தி வந்ததாகவும் புகார்கள் எழுந்தன.
இதைத் தொடர்ந்து மாவட்ட டி.எஸ்.பி. சரவணன், மாவட்ட சமூக நல அலுவலர் சரோஜா திருவேங்கடம் மற்றும் போலீசார் அந்த காப்பகத்தில் திடீர் சோதனை நடத்தினர்.
அதில் 69 குழந்தைகள் அரசு அனுமதி இன்றி அங்கு தங்க வைக்கப்பட்டிருந்தது கண்டுபடிக்கப்பட்டது.
அவர்கள் அனைவரையும் மீட்டு ராணிப்பேட்டையில் உள்ள சிறுவர் பாதுகாப்பு இல்லம், வேலூரில் உள்ள பிற்காப்பு இல்லம் ஆகிய இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.
மேலும், இந்த காப்பகம் குறித்து அதன் நிர்வாகியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications