கேட்டது நிவாரணம்-கிடைத்தது துப்பாக்கிச் சூடு!
திருவாரூர்: நிவாரணம் கேட்டு மறியல் செய்த பொது மக்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர் மழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை திருவாரூர் அருகே உள்ள முத்துப்பேட்டை முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
முகாமிற்கு தமிழக பால்வளத்துறை அமைச்சர் மதிவாணன் வருகை தந்த போது அவரை முற்றுகையிட்ட மக்கள் தங்களுக்கு முறையான உணவு, குடி நீர் போன்றவை கூட தரப்படவில்லை என்று குற்றம் சாட்டினர்.
மேலும் மருதங்காவெளித் தெருவில் உள்ள வீடுகள் இடிந்துள்ளதாகவும், அங்கு வெள்ளம் வடியவில்லை என்றும் கூறினர்.
இது சம்பந்தமாக மாவட்ட கலெக்டர் மூலம் உரிய தீர்வு காணப்படும் என்று அமைச்சர் மதிவாணன் கூறியுள்ளார்.
இந்த நிலையில் அமைச்சரின் பேச்சில் சமாதானம் அடையாத பொது மக்கள் முத்துப்பேட்டை பேரூராட்சி மீது அலுவலகம் மீது பொது மக்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், பேரூராட்சித் தலைவர் கார்த்திக் வீட்டையும் கற்கள் வீசி தாக்கியுள்ளனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொது மக்களை கலைந்து செல்லுமாறு உத்தரவிட்டனர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லாமல் அங்கேயே இருந்ததால் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இதனால் அங்கிருந்த பொது மக்கள் அலறி சிதறி ஓடினர். இந்த சம்பவம் காரணமாக முத்துப்பேட்டையில் பரபரப்பு நிலவுகிறது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
ஏப்ரல் 18 வரை தமிழகத்தில் வெளுக்கப் போகும் மழை.. எந்தெந்த பகுதிகளில் தெரியுமா? -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம்












Click it and Unblock the Notifications