Prakash Raj: எனக்கு பிடிவாரண்ட்டா? கொந்தளித்த நடிகர் பிரகாஷ் ராஜ்!
சென்னை: "என் மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் அப்பட்டமான பொய்" என்று நடிகர் பிரகாஷ்ராஜ் மறுத்தார்.
பிரகாஷ்ராஜ் நான்கு மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளதாகவும், அது குறித்து விசாரணைக்கு ஆஜராக அவருக்கு இரண்டு முறை சம்மன் அனுப்பப்பட்டும் அவர் வரவில்லை என்றும் கூறப்பட்டது.

இது தொடர்பாக திலீப்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் பெங்களூரு நடுவர் நீதிமன்றம் பிரகாஷ்ராஜுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதாக தகவல் பரவியது. இதை மறுத்துள்ள பிரகாஷ்ராஜ், 'தங்களை விற்றுவிட்ட நபர்கள் இது போன்ற பொய் செய்திகளை பரப்புவதாக' தனது எக்ஸ் (X) பதிவில் விமர்சித்துள்ளார்.
பின்னணி என்ன?: நடிகர் பிரகாஷ் ராஜ் கர்நாடகா, தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளார் என்றும், இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி சட்டவிரோதமானது என்றும் கூறி பெங்களூரைச் சேர்ந்த திலீப்குமார் என்பவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
சர்ச்சை: இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி பிரகாஷ் ராஜுக்கு இரண்டு முறை சம்மன் அனுப்பப்பட்டும் அவர் ஆஜராகவில்லை என்றும், இதனால் பெங்களூரு நடுவர் நீதிமன்றம் அவருக்கு எதிராக பிடிவாரண்ட் (Jailable/Non-bailable warrant) பிறப்பித்துள்ளதாகவும் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் ஜூன் 2026-ல் செய்திகள் பரவின. இதை மறுத்து பிரகாஷ் ராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications