புலிகளுக்கு எதிரான போரை நிறுத்த இந்தியா சொல்லாது: இலங்கை
கொழும்பு: விடுதலைப் புலிகளுடன் இலங்கை நடத்தி வரும் போரை நிறுத்துமாறு இந்திய அரசு கேட்டுக் கொள்ளாது என்று இலங்கை அமைச்சரும், சுதந்திரா கட்சி பொதுச் செயலாளருமான மைத்திரிபால் சிறிசேனா கூறியுள்ளார்.
கொழும்பில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் 22 பேரும் இந்திய பிரதமரை சந்தித்துப் பேசினாலும், விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரை அரசு ஒருபோதும் நிறுத்தாது.
பயங்கரவாதத்துக்கு எதிரான போரை நிறுத்துமாறு இந்திய அரசு ஒருபோதும் வேண்டுகோள் விடுக்காது. அரசின் நிலைப்பாடுகள் குறித்து இந்திய அரசுக்கு எடுத்துக் கூறியுள்ளோம்.
விடுதலைப்புலிகள் தற்போது பலவீனமடைந்து வருகின்றனர். இந்த நிலையில் அரசு போரை நிறுத்தாது. ஆயுதங்களை கீழே போட்டு விட்டு பேச்சுக்கு வருவதுதான் விடுதலைப்புலிகளுக்கு இருக்கக்கூடிய ஒரே வழி என்றார் அவர்.
இதேபோல, புலிகளுடன் நடத்தி வரும் போரை நிறுத்துமாறு அரசைக் கேட்டுக் கொள்ள மாட்டோம் என ஐக்கிய தேசிய கட்சியும் தெரிவித்துள்ளது.
அக்கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களான லக்ஸ்மன் கிரியெல்ல, லக்ஸ்மன் செனவிரட்ன ஆகியோர் நாடாளுமன்றதத்தில் பேசுகையில் இவ்வாறு தெரிவித்தனர்.
அதில் உரையாற்றிய லக்ஸ்மன் கிரியெல்ல, பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு ஐக்கிய தேசிய கட்சி ஆதரவு வழங்கும்.
பயங்கரவாதிகளை அழிப்பதற்கான போரை தொடர வேண்டும் என்றார்.
லக்ஸ்மன் செனவிரட்ன பேசுகையில், போரை நடத்துங்கள் பயங்கரவாதத்தை ஒழியுங்கள் அதற்கு ஆதரவு தருகின்றோம். படையினரின் வெற்றியை குறைத்து மதிப்பிடவில்லை.
அதேவேளையில், அரசியல் தீர்வு குறித்தும் அரசாங்கம் சிந்திக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications