ஆம்பூரில் எம்.ஜி.ஆர். சிலை உடைப்பு - பதற்றம்

Subscribe to Oneindia Tamil

ஆம்பூர்: வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகே முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். சிலையை மர்ம நபர்கள் உடைத்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகே உள்ள மந்தகரையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு எம்ஜிஆர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா திறந்து வைத்துள்ளார்.

இந்த நிலையில், நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் இந்த சிலையை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதில் சிலையின் இடது கை உடைக்கப்பட்டுள்ளது.

காலையி்ல் கண் விழித்துப் பார்த்த அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தர். சிலை உடைக்கப்பட்ட தகவல் அருகில் உள்ள ஊர்களுக்கும் பரவவே, அங்கு அதிமுக நிர்வாகிகள் குவிந்தனர். இதனால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டது.

இதனையடு்த்து எம்ஜிஆர் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆம்பூர் காவல் நிலையத்தில் அதிமுக நிர்வாகிகள் புகார் செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+