தீவிரவாதிகள் எங்கள் நாட்டவரே-யுஎஸ்சிடம் பாக். ஒப்புதல்

Subscribe to Oneindia Tamil

Mullen
டெல்லி: மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்கள் தான் என பாகிஸ்தான் அதிகாரிகள் தன்னிடம் ஒப்புக் கொண்டதாக அங்கு உயர் மட்ட ஆலோசனைகள் நடத்திவிட்டு இந்தியா வந்த அமெரிக்க முப்படைகளின் கூட்டுத் தளபதியான அட்மிரல் மைக்கல் முல்லன் கூறியுள்ளார்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆண்டனி மற்றும் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனிடம் முல்லன் இந்தத் தகவலைத் தெரிவித்ததாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கி்ன்றன.

பாகிஸ்தானில் அவர் அதிபர் சர்தாரி, ராணுவத் தளபதி, ஐஎஸ்ஐ தலைவர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியது குறிப்பிடத்தக்கது. அப்போது மும்பையைத் தாக்கிய தீவிரவாதிகள் தங்கள் நாட்டினர் அல்ல என அவர் கூறினர்.

ஆனால், அவர்கள் பாகிஸ்தானியர்கள் தான் என்பதற்கான பல ஆதாரங்களை முல்லன் காட்டியதையடுத்து அவர்கள் தங்கள் நாட்டரவே என்றும் அவர்கள் அனைவரும் லஷ்கர் ஏ தொய்பாவினரே என்றும் அந் நாட்டு ராணுவ, ஐஎஸ்ஐ அதிகாரிகள் ஒப்புக் கொண்டுவிட்டனர்.

இந்தத் தகவலை டெல்லி வந்த அவர் ஆண்டனி, நாராயணனிடம் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் கடற்படை தடுக்கவில்லை-கஸாவ்:

இதற்கிடையே போலீசாரிடம் சிக்கிய அஜ்மல் அமீர் கஸாவிடமிருந்து மேலும் ஒரு விவரமும் கிடைத்துள்ளது. அவன் அளித்த வாக்குமூலத்தில்,

நாங்கள் 10 பேரும் முமபையில் தாக்குதல் நடத்த கராச்சியிலிருந்து அல் ஹூசைனி என்ற கப்பலில் கடந்த 20ம் தேதி புறப்பட்டோம். இந்தக் கப்பலை பாகிஸ்தான் கடற்படை எந்த இடத்திலும் நிறுத்தவில்லை. நீண்ட பயணத்துக்குப் பின் இந்தியக் கடல் பகுதி வந்தவிட்டதாகக் கூறி எங்களை அதிலிருந்து குபேர் படகுக்கு மாற்றினர் என்று கூறியுள்ளான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+