For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரதமரின் நடவடிக்கையால் இன்று சென்செக்ஸ் சாதகம்

By Staff
Google Oneindia Tamil News

மும்பை: இந்திய ரிசர்வ் வங்கியின் தொடர்ச்சியான பணவியல் சீர்த்திருத்த நடவடிக்கை காரணமாக இன்று சென்செக்ஸில் நம்பிக்கை தரும் விதத்தில் துவங்கியது வர்த்தகம்.

பிற்பகல் 1 மணி அளவில் சென்செக்ஸில் 334 புள்ளிகள் உயர்ந்து 9299 புள்ளிகளாக இருந்தது.தேசிய பங்குச் சந்தை நிப்டி 101 புள்ளிகள் உயர்ந்து 2816 ஆக இருந்தது.

ரிசர்வ் வங்கி ரெபோ ரேட்டைக் குறைத்ததன் மூலம் ரூ.30,700 கோடி பணப்புழக்கம் அதிகரிக்கப்பட்டதையடுத்து இந்த சாதகமான நிலை இன்று நிலவுகிறது. வர்த்தக நேர ஆரம்பத்திலேயே 311 புள்ளிகள் உயர்ந்துவிட்டது.

இன்றைய வர்த்தகத்தில் இதுவரை அதிக லாபத்தில் பரிமாற்றம் செய்யப்பட்ட பங்குகள் ரிலையன்ஸ் (6.71), எச்டிஎப்சி (6.67), எச்டிஎப்சி பேங்க் (6.32), டிஎல்எப் (6.03) மற்றும் ரிலையன்ஸ் (5.88).
அதிக இழப்பைச் சம்பாதித்த பங்குகள் மாருதி சுசுகி.

ஆசிய பங்குச் சந்தைகள் ஹாங்க் சென், நிக்கி மற்றும் சீனாவின் ஷாங்காய் சந்தைகளிலும் நல்ல உயர்வு காணப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X