For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை அருகே 42 இலங்கை மீனவர்கள் கைது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை அருகே இந்திய கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த 42 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்திய கடல் பகுதியில் தற்போது தீவிர ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 2 நாட்களுக்கு முன்பு சென்னை அருகே இலங்கையைச் சேர்ந்த 8 படகுகளில் இருந்த மீனவர்கள் இந்தியப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

உடனடியாக விரைந்து சென்ற கடலோரக் காவல் படையினர் அவர்களை வளைத்துப் பிடித்தனர். படகுகளையும் அதில் இருந்த 42 மீனவர்களையும் நேற்று சென்னைக்குக் கொண்டு வந்தனர்.

காசிமேடு துறைமுகத்திற்குக் கொண்டு வரப்பட்ட அவர்கள் பின்னர் துறைமுகம் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். போலீஸார் அவர்களைக் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X