மது விலக்கு-கருணாநிதியை சந்திக்கும் ராமதாஸ்
கிருஷ்ணகிரி: பூரண மது விலக்கு கொண்டு வர கோரி மனு கொடுக்க தமிழக முதல்வர் கருணாநிதியை சந்திக்க உள்ளதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்திய அரசு எச்சரிக்கை விடுத்தால் 24 மணி நேரத்திற்குள் சண்டை நின்று விடும். சண்டை நிறுத்தப்படும் என்று பிரதமரிடமும், தமிழக முதல்வரிடமும் உத்தரவாதம் பெற வேண்டும்.
தமிழகத்தில் பூரண மது விலக்கு கொண்டு வர கோரி மனு கொடுக்க தமிழக முதல்வர் கருணாநிதியை இந்த மாதம் சந்திக்க உள்ளேன்.
ஓகேனக்கல் கூட்டுக்குடி நீர் திட்டத்திற்கு மத்திய அரசு 1998 ம் ஆண்டு தடையில்லா சான்று வழங்கிவிட்டது. ஆனாலும் கடந்த 10 வருடங்களாக பணிகள் நடைபெறவில்லை. எனவே வரும் 2010 ம் ஆண்டு பொங்கலுக்குள் இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். ஜப்பான் நாட்டு நிதி உதவிக்காக காத்திருக்க கூடாது என்றார் அவர்.