யாஹூ சி.இ.ஓ. ஆகிறார் அருண் சரீன்?

வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. புதிய பதவியை ஏற்பது குறித்து அவர் பரிசீலித்து வருகிறாராம்.
யாஹூ நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு, புதிய தலைமை செயலதிகாரியை தேர்வு செய்வதில் மும்முரமாக உள்ளனர். தற்போது அவர்கள் சரீன் பெயரை இறுதி செய்து வைத்துள்ளனர். இன்னும் சில வாரங்களில் அவரது பெயர் இறுதி செய்யப்படும் எனத் தெரிகிறது.
அருண் சரீன் தவிர வேறு சில பெயர்களும் இறுதிக் கட்டப் பரிசீலனையில் உள்ளன. இருப்பினும் சரீனை தேர்வு செய்ய யாஹூ முடிவு செய்யும் எனத் தெரிகிறது.
ஜூலை மாதம்தான் சரீன், வோடோபோன் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றார்.
கடந்த வாரம் யாஹூ நிறுவனத்தின் இணை நிறுவனரான ஜெர்ரி யங் தலைமை செயலதிகாரி பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார் என்பது நினைவிருக்கலாம்.
யாஹூ நிறுவனத்தை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு விற்பது தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சையில் யங் தலை உருண்டது. யங்தான், மைக்ரோசாப்ட் டீலை குழப்பி விட்டார் என்பது யாஹூ நிறுவனத்திற்குள் ஏற்பட்ட குற்றச்சாட்டு. இதையடுத்தே தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்தார் யங் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications