பாக்.கை நெருக்கும் அமெரிக்க பார்முலா - பலன் தருமா?
வாஷிங்டன்: மும்பை தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக, அமெரிக்கா வகுத்துள்ள புதிய பார்முலாவைத் தொடர்ந்தே பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகள் மீதான நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அது என்ன அமெரிக்க பார்முலா?
தீவிரவாதிகள் தொடர்பாக பாகிஸ்தானிடம், சில வழிமுறைகளை வகுத்துக் கூறியுள்ளது.
இதையடுத்தே பாகிஸ்தான் தனது நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக தெரிகிறது.
இதுதான் அந்த அமெரிக்க பார்முலா ...
- லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள், போராளிகளை பாகிஸ்தான் கைது செய்ய வேண்டும். அவர்களது நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். அவர்கள் மீது உள்ளூரில் செய்த குற்றங்களுக்காக வழக்கு தொடர வேண்டும்.
- ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பினர் மீதும் இந்த நடவடிக்கை பாய வேண்டும்.
- கைது செய்யப்பட்டவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்கவோ, நாடு கடத்தவோ தேவையில்லை.
- மும்பைத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக இந்தியாவுடன் இணைந்து பாகிஸ்தான் விசாரணை மேற்கொள்ளலாம்.
- கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளை இந்திய அதிகாரிகள் நேரில் விசாரிக்க இந்த கூட்டு விசாரணைக் குழு மூலமாக அனுமதி அளிக்கலாம்.
இந்த பார்முலாப்படியே தற்போது பாகிஸ்தான் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தானுக்கு சாதகமாக அமெரிக்கா வகுத்துக் கொடுத்துள்ள இந்த பார்முலாவால் இந்தியாவுக்கு எந்த அளவுக்கு பலன் இருக்க முடியும் என்று தெரியவில்லை. அதேசமயம், ஐ.எஸ்.ஐக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க இந்தியா கோரலாம் என்ற 'தாராள' சலுகையை அமெரிக்கா அளித்துள்ளதாம்.












Click it and Unblock the Notifications