'கோவாவிலிருந்து வெளியேறுங்கள்'-இஸ்ரேலியர்களுக்கு அறிவுரை!!
ஜெருசலேம்: இந்தியாவின் சுற்றுலா நகரமான கோவாவில் தங்கியுள்ள இஸ்ரேலியர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறிவிடவும் என இஸ்ரேல் அரசு அறிவுறுத்தியுள்ளது.
எந்த நேரமும் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் கோவா நகருக்கு இருப்பதாக பாதுகாப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பை இஸ்ரேலிய அரசு வெளியிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் திருவிழா கோவாவில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பயணிகள் இந்த விழாவில் பங்கேற்று வருகின்றனர். இதற்காகவே வரும் பயணிகளும் உண்டு. இந்த ஆண்டும் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்கிடைய இந்த கொண்டாட்டங்களைத் தடுக்கும் விதத்தில் தீவிரவாதிகளின் ஹிட் லிஸ்டில் கோவாவும் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தத் வெளியான உடன் இஸ்ரேல் நாட்டு அரசு தங்கள் நாட்டுப் பயணிகளுக்கு சிறப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. உடனடியாக கோவாவிலிருந்து இஸ்ரேலியர்கள் அனைவரும் வெளியேறிவிடுமாறு அதில் அறிவுறுத்தியுள்ளது.
தீவிரவாதிகளின் இந்த செயலால் கோவாவின் இமேஜ் சிதைந்துள்ளதோடு, பல மில்லியன் ரூபாய் வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications