Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொள்கைக்காக பதவியை துறந்த வி.பி.சிங்: திருமா

Subscribe to Oneindia Tamil

ென்னை: பிற்படு்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு பெற்றுத் தருவதற்காக தனது பதவியையே துறந்தவர் முன்னாள் பிரதமர் மறைந்த வி.பி.சிங் என்று விடுதலை சிறுத்தைகளின் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறினார்.

அக் கட்சியின் சார்பில் வி.பி.சிங் படத் திறப்பு விழாவும், வீர வணக்க கூட்டமும் நடைபெற்றது.

அதி்ல் திருமாவளவன் பேசுகையில்,

மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங் கொள்கைகளுக்காகவே வாழ்ந்தவர், கொள்கைக்காகவே தன் பதவியை துறந்தவர். வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்த முயன்றார்.

இதனால் வி.பி.சிங் ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக வாபஸ் வாங்கியது. இதனால் வி.பி.சிங் பதவி இழக்க நேரிட்டது. ஆனால், அதற்காக அவர் கவலைப்படவில்லை.

தன் பதவி பறிபோகும் என்று தெரிந்தே மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்த போராடியவர் வி.பி.சிங். ராஜவம்சத்தில் பிறந்தவர் வி.பி.சிங்.

ராஜவம்சத்தில் பிறந்திருந்தாலும் பெரியார், அம்பேத்கார் போன்றோரின் கொள்கைகளை படித்து பிற்படுத்தப்பட்டவர்களுக்காக போராடியவர். ஜனநாயக கொள்கைகளை நடைமுறைப்படுத்த சிறிது காலம் அரசியலை விட்டே விலகி இருந்தவர்.

சமூகத்தில் தகுதியற்றவர்களாக கருதப்பட்ட, ஒடுக்கப்பட்டோரின் நீதிக்காக போராடியதால் தான் அவரை அவரை சமூக நீதிக் காவலர் என்று அழைக்கிறோம் என்றார்.

வி.பி.சிங்கின் திருவுருவப் படத்தை திறந்து வைத்து நடிகர் சத்யராஜ் பேசுகையில்,

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தான் ஒடுக்கப்பட்ட மக்களின் வலி தெரியும். ஆனால், முன்னாள் பிரதமர் வி.பி.சிங் ராஜவம்சத்தில் பிறந்தவர். இருந்தாலும் கூட ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர். இப்படிப்பட்ட மனிதர்களை பார்ப்பதே அபூர்வம் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+