டிக்கெட் எடுக்காத பயணி நிர்வாணமாக ஓட்டம்
சென்னை: டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த பயணியை, டிக்கெட் பரிசோதகர்கள் பிடித்தபோது, அந்த பயணி தனது உடைகளைக் களைந்து விட்டு நிர்வாணமாக ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை கேளம்பாக்கத்திலிருந்து பிராட்வேக்கு மாநகர பஸ் இன்று காலை வலந்தது.
பஸ், சேப்பாக்கம் நிறுத்தத்திற்கு வந்தபோது டிக்கெட் பரிசோதகர்கள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணி டிக்கெட் எடுக்காமல் இருந்தது தெரியவந்தது.
அவரை டிக்கெட் பரிசோதகர்கள் பிடித்தபோது திடீரென அந்த நபர் ஆடையை கழற்றி வீசிவிட்டு நிர்வாணமாக ஓடியுள்ளார்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பரிசோதகர்கள், சுதாரித்துக் கொண்டு அவரைத் துரத்திப் பிடித்தனர். சிறிது தூர துரத்தலுக்குப் பின்னர் சிக்கிய அந்த நபரிடம், டிரஸ்ஸைக் கொடுத்து மாட்டிக் கொள்ள வைத்து பின்னர் அண்ணா ஸ்கொயர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அந்த வித்தவுட் நபரின் பெயர் ராஜசேகரன். 50 வயதாகும் அவர் கேளம்பாக்கத்தைச் சேர்ந்தவர். டீக்கடையில் வேலை பார்த்து வருகிறாராம்.
இனிமேல் இப்படியெல்லாம் செய்யக் கூடாது என்று போலீஸார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications