ஆழியாற்றில் முதலைகள் அட்டகாசம் - பிடிக்க தீவிரம்
கோவை: ஆழியாற்றில் முதலைகள் நடமாட்டம் இருப்பதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். அந்த முதலைகளைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆனைமலை ஆழியாற்றில் முதலைகள் நடமாட்டம் இருப்பதாகவும், வெயில் நேரத்தில் பாறையின் மேல் முதலைகள் இருந்ததை பார்த்ததாகவும் விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆனைமலை பழைய சுடுகாட்டுப்பகுதியில் உள்ள ஆழமான பகுதி மற்றும் சிங்காநல்லூர் பகுதிகளிலும் முதலைகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சிங்கா நல்லூர் ஆழியாற்றங்கரை பகுதியில் 10 அடி நீள முதலை வாய் பிளந்த நிலையில் ஆக்ரோஷமாக உலா வந்ததை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் போனது. அவர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் வருவதற்குள் முதலை வேகமாக போய் விட்டது.
அந்த முதலையை பிடிப்பதற்காக அமராவதியில் உள்ள முதலைப் பண்ணைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்து ஊழியர்கள் இன்று சிங்காநல்லூர் வருகின்றனர். அவர்கள் முதலையை பிடிக்கும் நடவடிக்கையை மேற்கொள் கிறார்கள்.
முதலைகள் பிடிபடும் வரை ஆனைமலை ஆழியாற்றங்கரையில் உள்ள பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று பொள்ளாச்சி வனச்சரகர் வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications