Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தலித் மக்கள் ஆலய நுழைவுப் போராட்டம்!

Subscribe to Oneindia Tamil

Temple Gopuram
நெல்லை: சங்கரன்கோவில் தாலுகா அருகே உள்ள பந்தப்புளி கிராம மாரியம்மன் கோவிலுக்குள் தலித் மக்கள் நுழைய தடை உள்ளது இதை எதிர்த்து டிசம்பர் 17ம் தேதி் ஆலய நுழைவுப் போராட்டம் நடைபெறவுள்ளது.

கண்ணநல்லூர் மாரியம்மன் கோவில் என்றழைக்கப்படும் இந்த ஆலயத்திற்குள் செல்ல தலித் மக்கள் பல காலமாகவே அனுமதிக்கப்படுவதில்லை.

இதை எதிர்த்து சங்கரன்கோவில் உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், கோவில் குறிப்பிட்ட யாருக்கும் சொந்தம் இல்லை, எனவே அனைத்து பிரிவு மக்களும் சென்று வழிபட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.

ஆனால், இத்தீர்ப்பின்படி தலித் மக்கள் வழிபட முயன்றபோது, கோவில் பூசாரி கோவிலை பூட்டி விட்டு சாவியோடு தலை மறைவாகிவிட்டார்.

இந்த விவகாரத்தில் அதிகாரிகள் மெளனம் காப்பதால் பந்தப்புளி கிராமத்தில் பதட்டம் நிலவுகிறது.

இந் நிலையில் கோவிலுக்குள் செல்ல தலித் மக்கள் சிலர் முயன்றபோது இன்னொரு பிரிவு மக்கள் தலித் மக்களின் குடியிருப்புகளில் கல் எறிந்து பதட்டத்தை அதிகரித்து வந்தனர்.

வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டதை கண்டித்து தலித் மக்கள் தொடர் போராட்டம் நடத்தினர்.

இந் நிலையில், டிசம்பர் 17ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் தலைமையில் தலித் மக்கள் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தவுள்ளனர்.

இதனால் திருநெல்வேலி மாவட்டத்தில் பதட்டம் மேலும் அதிகரித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+