விழுப்புரம்-2 பஸ்கள் மோதலில் 3 பேர் பலி
விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை அருகே இரண்டு பஸ்கள் மோதிக் கொண்டதில் டிரைவர் உட்பட 3 பேர் பலியாயினர். 15 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சியில் இருந்து அரசு பஸ் விழுப்புரம் வந்து கொண்டிருந்தது. சென்னையில் இருந்து மதுரைக்கு ஒரு ஆம்னி பஸ் சென்று கொண்டிருந்தது.
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டையில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் பில்லூர் குறுக்கு ரோடு அருகே இன்று காலை 5.30 மணியளவில் 2 பஸ்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இதில் தனியார் பஸ் டிரைவர் ஆசாத் (47), அரசு பஸ்சில் பயணம் செய்த அல்பா (35), ஆம்னி பஸ்சில் பயணம் செய்த விஜயன் (20) ஆகியோர் அந்த இடத்திலேயே பலியாயினர்.
மேலும் 40 பேர் காயமடைந்தனர். அவர்களில் பலத்த காயமடைந்த 15 பேர் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் விபத்துள்ளான அரசு பஸ் புத்தம் புதியது என்பது குறிப்பிடத்தக்கது. விழுப்புரம் கோட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட அந்த பஸ் திருச்சியில் இருந்து விழுப்புரம் வந்து கொண்டிருந்தபோது விபத்து நடந்தது.












Click it and Unblock the Notifications