தீவிரவாதத்திற்கு எதிராக உறுதியான நடவடிக்கை: மாநில அரசுகளுக்கு பிரதமர் கோரிக்கை
டெல்லி: தீவிரவாதத்தை ஒடுக்க மாநில அரசுகள் உறுதியான, விரைவான நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டியது அவர்களின் தார்மீகக் கடமை என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
டெல்லியில் நடந்த மனித உரிமை மற்றும் சட்டம் குறித்த சர்வதேச மாநாட்டைத் தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:
தீவிரவாதமும், பயங்கரவாதமும் ஜனநாயகத்திற்கும், வளர்ச்சிக்கும், மிகப் பெரிய அச்சுறுத்தலாக விஸ்வரூபம் எடுத்து வருவது குறித்த விழிப்புணர்வு நமது பிராந்தியத்தில் அதிகரித்துள்ளது.
மாநில அரசுகளும், அதிகாரிகளும், காவல்துறையினரும், பாதுகாப்புப் படையினரும், இதை உறுதியாகவும், விரைவாகவும் ஒடுக்க வேண்டியது அவர்களின் தார்மீகக் கடமையாகும்.
உலகெங்கிலும் உள்ள அமைதி விரும்பிகளும், ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைந்து, கை கோர்த்து, தீவிரவாதத்திற்கு எதிராக போராட திரள வேண்டும்.
தீவிரவாத மிரட்டல் சற்றும் வலுக் குறையவில்லை. அதேசமயம், தீவிரவாதத்திற்கு எதிரான போரிலும் எந்தப் பிளவும் இல்லை. சுதந்திரத்தைக் காப்பதிலும், அமைதியை நிலை நிறுத்துவதிலும் எந்தப் பின்னடைவும் இல்லை.
மும்பை தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து உலக நாடுகள் இந்தியாவுக்கு தங்களது ஆறுதலையும், ஆதரவையும் தெரிவித்தன. அவர்களுக்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம். உலகின் பல்வேறு நாடுகளின் தலைவர்கள், அண்டை நாடுகளின் தலைவர்கள் உள்பட பல தலைவர்கள் என்னைத் தொடர்பு கொண்டு பேசினர்.
தீவிரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவுக்கு உறுதுணையாக இருப்போம் என அவர்கள் அப்போது உறுதியளித்தனர் என்றார் மன்மோகன் சிங்.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி












Click it and Unblock the Notifications