கிளிநொச்சி: புலிகளின் நிலைகள் மீது கடும் விமானத் தாக்குதல்

Subscribe to Oneindia Tamil

கிளிநொச்சி: கிளிநொச்சியில், இலங்கை விமானப்படைகள் சரமாரியான குண்டு வீச்சில் ஈடுபட்டன. இதில் 12 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

தெற்கு கிளிநொச்சியில் உள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய நிலைகள் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், மேற்கு பரந்தன் பகுதியிலும் தாக்குதல் நடந்ததாகவும் இலங்கை விமானப்படை கூறியுள்ளது.

இதுகுறித்து விமானப்படை செய்தித் தொடர்பாளர் ஜனக நாணயக்காரா கூறுகையில், ராணுவத்தின் 57வது பிரிவு மற்றும் முதலாவது அதிரடிப்படை ஆகியவற்றின் உதவியோடு இந்த விமானத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

மேற்கு மற்றும் வட கிழக்கு கிளிநொச்சியில் உள்ள 6 நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. போர் விமானங்கள் அங்கு குண்டு வீசி தாக்கின.

இதில் விடுதலைப் புலிகளின் வானொலி ஒலிபரப்பு மையம் பெரும் சேதமடைந்தது.

இந்த தாக்குதல்களில் 12 விடுதலைப் புலிகள் பலியானதாக நாணயக்காரா கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+