திருப்பதி மலையில் விழுந்த சென்னை பக்தர் மீட்பு

Subscribe to Oneindia Tamil

திருமலை: சென்னையைச் சேர்ந்த பக்தர், திருப்பதிக்குச் சென்றபோது தவறி 20 அடி பள்ளத்தில் விழுந்து விட்டார். அவரை தீயணைப்புப் படையினர் போராடி பத்திரமாக மீட்டனர்.

சென்னையை சேர்ந்த பத்மநாபன் திருப்பதி கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக நடைபாதை வழியாக படிக்கட்டுகளில் ஏறி திருமலைக்கு சென்று கொண்டு இருந்தார்.

மலை உச்சியில் நின்று கீழே இயற்கை காட்சிகளை ரசித்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென்று அவருக்கு மயக்கம் வந்தது. இதனால் தலை சுற்றி 20 அடி பள்ளத்தில் விழுந்து விட்டார்.

அதிர்ஷ்டவசமாக அவர் விழுந்த இடத்தில் ஏராளமான மரங்கள் நிறைந்திருந்ததால் மரக் கிளைளுக்குள் சிக்கிக் கொண்டார்.

இதையடுத்து காப்பாற்றக் கோரி அவர் குரல் கொடுத்தார். இதையடுத்து மலைப் பாதையில் போய்க் கொண்டிருந்தவர்கள் தீயணைப்புப் படையினருக்குத் தகவல் கொடுத்தனர்.

தீயணைப்பு வீ்ரர்கள் விரைந்து வந்து, பத்மநாபனை சுமார் ஒன்றரை மணி நேரம் போராடி மீட்டனர்.

கீழே விழுந்து மரக் கிளைகளில் சிக்கியதால், கை, கால்களில் காயம் ஏற்பட்டிருந்தது. இதையடுத்து திருப்பதி அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+