தாஜ் மகாலில் துப்பாக்கிகளுடன் நுழைந்த 2 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

ஆக்ரா: தாஜ் மகாலின் பாதுகாப்பு வளையத்துக்குள் துப்பாக்கிகளுடன் நுழைந்த இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும் 3 பேர் தப்பியோடிவிட்டனர்.

சில ஆண்டுகளாகவே தாஜ் மகாலுக்கு பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந் நிலையில் நேற்று யெல்லோ ஸோன் என்றழைக்கப்படும் தாஜ் மகாலின் 500 மீட்டர் சுற்று வளையத்துக்குள் 5 பேர் வந்தனர்.

அவர்களை போலீசார் சோதனையிட்டபோது இவர்களிடம் இரண்டு பிஸ்டல்கள் இருந்தன. இதையடுத்து இருவரை அங்கிருந்த போலீசார் பிடித்தனர். மற்ற மூவரும் தப்பியோடிவிட்டனர்.

விசாரணையில் அவர்கள் மணிப்பூரைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. அவர்கள் மணிப்பூரின் தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புடையவர்களா என்று விசாரணை நடக்கிறது.

தாஜ் மகாலுக்குள் தாக்குதல் ஏதும் நடத்த இவர்கள் திட்டமிட்டிருந்தார்களா என்றும் விசாரி்க்கப்பட்டு வருகிறது.

ஆனால், இவர்கள் சுற்றுலாப் பயணிகளை துப்பாக்கி முனையில் மிரட்டி பணம் பறிக்கும் கொள்ளைக் கும்பல் தான் என்று ஒரு தகவல் தெரிவிக்கிறது.

முதல் இரு கட்ட பாதுகாப்பு வளையத்தையும் தாண்டி இவர்கள் துப்பாக்கிகளுடன் உள்ளே நுழைந்ததற்கு போலீசாரின் கவனமின்மையே காரணம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+