3 லட்சம் தபால் ஊழியர்கள் நாளை முதல் காலவரையற்ற ஸ்டிரைக்!
சென்னை: ஊதிய உயர்வு, போனஸ் போன்றவை குறித்த நடராஜ மூர்த்தி பரிந்துரைகளை எதிர்த்து நாடு முழுவதும் தபால் ஊழியர்கள் நாளை காலவரையற்ற ஸ்டிரைக் மேற்கொள்வதாக அறிவித்துள்ளனர்.
அஞ்சல்துறையில் புற நிலை ஊழியர்களுக்கு நடராஜமூர்த்தி கமிட்டி சில பரிந்துரைகளை அறிவித்துள்ளது ஆனால் இவை ஊவியர் நலனுக்கு விரோதமாக உள்ளதாகக் கூறி, ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முதல் கட்டமாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
அடுத்து பரிந்துரை நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. ஆனாலும் கோரிக்கைகள் ஏற்கப்படாததால் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபடப்போவதாக புறநிலை அஞ்சல் ஊழியர் சங்க பொதுச்செயலாளர் மகாதேவய்யா அறிவித்தார்.
இதையடுத்து டெல்லியில் கடந்த 12-ந்தேதி உயர் அதிகாரிகள் பேச்சு நடத்தினர். நேற்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை.
இதை தொடர்ந்து நாளை (புதன்கிழமை) முதல் புறநிலை அஞ்சல் ஊழியர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக இதர அஞ்சல் ஊழியர்களும் ஸ்டிரைக்கில் பங்கேற்கிறார்கள்.
நாடு முழுவதும் 3 லட்சம் ஊழியர்கள் இந்த போராட் டத்தில் ஈடுபடுகின்றனர். நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் மட்டும் 3500 பேர் ஸ்டிரைக்கில் பங்கேற்கிறார்கள்.