பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கை இல்லை!- ஏ.கே.அந்தோணி

Subscribe to Oneindia Tamil

AK Antony
டெல்லி: பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கும் திட்டம் எதுவும் இந்தியாவிடம் இல்லை என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏகே அந்தோணி கூறியுள்ளார்.

பங்களாதேஷ் போரில் இந்தியா பெற்ற மகத்தான வெற்றியின் 37-ம் ஆண்டு விழாவான 'விஜய் திவாஸ்' நிகழ்ச்சியில் பேசிய அந்தோணி இதைத் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

இந்தியாவில் நாச வேலைகள் செய்த தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அந்நாட்டின் மீது போர் தொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த தீவிரவாதிகளை மேலும் விரைந்து அழிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளத்தான் இப்போது விரும்புகிறோம். அப்போதுதான் இருநாட்டு உறவுகளும் மேம்படும்.

அதேநேரம், மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதிகள் அனைவர் மீதும் முழுமையான நடவடிக்கைகயை பாகிஸ்தான் எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நிலைமை இயல்பாக இருக்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்திய - பாகிஸ்தான் எல்லையில் படை வீரர்கள் எப்போதும் போல் உஷாராக உள்ளனர். ஆனால் புதிதாக படை வீரர்களைக் குவிக்கவில்லை. இயல்பு நிலை நிலவுகிறது.

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் அமலில் உள்ள போர் நிறுத்தத்தை இந்தியா விலக்கிக் கொண்டதாகக் கூறப்படுவது முற்றிலும் தவறு. இன்னமும் போர் நிறுத்தம் அமலில் உள்ளது என்றார் அந்தோணி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+