ஷீலா தீக்ஷித் 3வது முறையாக முதல்வராக பதவியேற்பு
Subscribe to Oneindia Tamil

டெல்லி சட்டசபைக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. பாஜகவின் பலத்த எதிர்பார்ப்பை ஷீலா தீக்ஷித் தலைமையில் காங்கிரஸ் தவிடுபொடியாக்கியது.
இதையடுத்து இன்று ஷீலா தீக்ஷித் டெல்லி முதல்வராக 3வது முறையாக இன்று மீண்டும் பதவியேற்றுக் கொண்டார்.
ராஜ்பவனில் நடந்த பதவியேற்பு விழாவில், ஷீலாவுக்கு துணை நிலை ஆளுநர் தேஜேந்தர் கண்ணா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
ஷீலாவுடன் ஏ.கே.வாலியா, அரவிந்தர் சிங் லவ்லி, ராஜ் குமார் செளகான், மங்கத் ராம் சிங்கால் ஆகிய ஆறு கேபினட் அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இவர்கள் ஏற்கனவே அமைச்சர்களாக இருந்தவர்கள்.
இவர்கள் தவிர டாக்டர் கிரன் வாலியா என்ற புதுமுகமும் அமைச்சராக நியமிக்கப்படவுள்ளார்.












Click it and Unblock the Notifications