தொடரும் கொலைகள் - மதம் மாறுவோம் என தலித்கள் மிரட்டல்
நெல்லை: தங்களது சமூகத்தினர் மீதான தாக்குதல்கள் மற்றும் கொலைகள் தடுத்து நிறுத்தப்படாவிட்டால் இஸ்லாமிய மதத்திற்கு மாறுவோம் என நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் அருகே உள்ள கிராமத்தினர் ஆட்சித் தலைவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லை தச்சநல்லூர் கரையிருப்பு கிராமத்தில் ஆர்எஸ்ஏ நகர் உள்ளது. இங்கு வசிக்கும் மக்கள் சுமார் 200 பெண்கள் உள்பட 500 பேர் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகம் திரண்டு வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலக வாளகத்தில் தரையில் அமர்ந்து திடீர் போராட்டம் நடத்தினர்.
உடனே அங்கிருந்த போலீசார் அவர்களில் 2 பேரை அழைத்து கலெக்டரிடம் மனு கொடுக்க கூறினர். ஆனால் கலெக்டர் நேரடியாக வந்து தங்களின் குறைகளை கேட்க வேண்டும் என்று கூறி கலெக்டர் மனு பெற்றுக் கொண்டிருந்த அலுவலகத்தை முற்றுகையி்ட்டு அறை வாசலில் அமர்ந்தனர்.
இதையடுத்து போலீஸ் உதவி கமிஷனர் ஞானசேகரன், பாளை இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அவர்களில் சிலரை அழைத்து சென்று கலெக்டரை சந்திக்க செய்தனர்.
கலெக்டரிடம் தலித் மக்கள் கொடுத்த புகார் மனுவில், 1997ம் ஆண்டில் நடந்த சாதிமோதலில் தாழ்த்தப்பட்ட மக்களான எங்கள் பகுதியை சேர்ந்த சுடலைமணி, ராமசந்திரன், உய்க்காட்டான், ராமன் ஆகியோர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
பலமுறை அதிகாரிகள் முன்னிலையில் அமைதி கூட்டம் நடத்தியும் எங்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து வந்தது. இந்நிலையில் கடந்த 9ம் தேதி மூக்காண்டி என்பவரையும் கரையிருப்பை சேர்ந்தவர்கள் கொலை செய்து விட்டனர்.
பலர் கொல்லப்பட்டதாலும், அமைதி கூட்டம் நடத்தி எந்த பலனும் இல்லாததாலும், தாழ்த்தப்பட்ட மக்களாகிய நாங்கள் 400 குடும்பத்தினர் இஸ்லாமிய மதத்திற்கு மாறுவதாக முடிவு செய்துள்ளோம்.
எனவே எங்கள் ஊர் மக்கள் அமைதியாகவும், எந்தவித பிரச்சனையும் இன்றி வாழ தேவையான நடவடிக்கைகளை கலெக்டர் எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications