லண்டன்-ஆந்திர மாணவியை கொன்ற இந்தியருக்கு ஆயுள்
ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த ஜோதிர்மாய் (23) . அதே ஊரைச் சேர்ந்தவர் நாகராஜ் குமார் (25). இருவரும் ஒரே கல்லூரியில் பிசியோதெராபி படித்தனர். மேல்படிப்புக்காக இருவரும் கடந்த 2007ம் ஆண்டு இங்கிலாந்தின் வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தி்ல் சேர்ந்தனர்.
ஹான்ஸ்வர்த் என்ற இடத்தில் பிளாட்டில் தனித்தனியாக அறை எடுத்து தங்கிப் படித்தனர்.
இந் நிலையில் கடந்த மே மாதம் 6ம் தேதி ஜோதிர்மாய் தனது அறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதையடுத்து மாணவர் நாகராஜகுமார் கையில் ரத்தக் காயத்துடன் போலீசாரை அணுகி, சில நீக்ரோ வாலிபர்கள் ஜோதிர்மாயையும் தன்னையும் தாக்கியதாகவும், இதில் ஜோதிர்மாய் இறந்துவிட்டதாகவும் கூறினார்.
ஆனால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் விசாரணை நடத்தியபோது ஜோதிர்மாயை அவர் கொலை செய்தது தெரியவந்தது.
ஜோதிர்மாயை ஒருதலையாக காதலித்து வந்த நாகராஜ்குமார் அவரை திருமணம் செய்யுமாறு வற்புறுத்தியுள்ளார். இந்த காதலை ஜோதிர்மாய் ஏற்கவில்லை. இந் நிலையில மே மாதம் 6ம் தேதி ஜோதிர்மாயி்ன் அறைக்குச் சென்று அவரை மானபங்கம் செய்ய முயன்றுள்ளார் நாகராஜ்குமார்.
தப்பிக்க போராடிய ஜோதிர்மாயின் தலையை சுவரில் மோதியுள்ளார். இதி்ல் அவர் மயங்கிய பின் அவரை கற்பழித்துள்ளார். இதையடுத்து ஜோதிர்மாய் இறந்தார்.
இதையடுத்து போலீசை திசை திருப்ப தனது கையில் கத்தியால் வெட்டிக் கொண்டு கருப்பின வாலிபர்கள் தாக்கியதாக பொய் கூறினார்.
இது குறித்து விசாரணை நடத்திய லண்டன் பர்மிங்காம் கிரெளன் நீதிமன்றம் நாகராஜகுமாருக்கு 25 வருடம் ஆயுள் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு வழங்கியது.













Click it and Unblock the Notifications