பாக். தப்ப முடியாது-இந்தியா எதற்கும் தயார்: பிரணாப்

டெல்லியில், பல்வேறு நாடுகளின் இந்திய தூதர்களின் இரண்டு நாள் மாநாடு இன்று தொடங்கியது.
120-க்கும் மேற்பட்ட நாடுகளில் பணியாற்றி வரும் இந்திய தூதர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் இதில் பங்கேற்றுள்ளனர்.
மாநாட்டை மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தொடங்கி வைத்தார். நாளை பிரதமர் மன்மோகன் சிங் உரை நிகழ்த்தவுள்ளார்.
மும்பை சம்பவத்தைத் தொடர்ந்து பாகிஸ்தானுடன் நிலவும் உறவு, ஏற்பட்டுள்ள சூழ்நிலை, தற்போதைய சூழ்நிலையில், சர்வதேச அரங்கில் இந்தியாவின் கருத்தை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பது குறித்து இந்திய தூதர்களுக்கு இரு தலைவர்களும் விளக்கவுள்ளனர்.
இது தவிர மும்பை தாக்குதல், பாகிஸ்தான் உளவு அமைப்புக்கும், தீவிரவாதிகளுக்கும் உள்ள தொடர்பு, இரு நாடுகளுக்கு இடையிலான போர் பதட்டம் போன்றவை குறித்தும் மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.
மாநாட்டைத் தொடங்கி வைத்த பின்னர் பிரணாப் முகர்ஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், தீவிரவாதம், தீவிரவாதிகள், தீவிரவாத முகாம்கள் ஒழிப்பு குறித்து பாகிஸ்தான் பல உறுதிமொழிகளை அளித்துள்ளது. அவற்றை அது நிறைவேற்றியே ஆக வேண்டும். அதிலிருந்து தப்ப முடியாது.
என்ன உறுதிமொழியையெல்லாம் பாகிஸ்தான் கொடுத்ததோ அதை அது நிறைவேற்றியாக வேண்டும். அதைத்தான் நாம் எதிர்பார்க்கிறோம். சர்வதேச சமுதாயத்தில் பொறுப்பான ஒரு நாடு தனது கடமையிலிருந்து தவற முடியாது.
நமது மக்கள் பலரின் உயிர் பறிபோயுள்ளது. பெருமளவிலான சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. எனவே பாகிஸ்தான் கண்டிப்பாக செயல்பட்டாக வேண்டும். அதிலிருந்து தப்புவதை அனுமதிக்க முடியாது.
ராணுவத் தாக்குதல் உண்டா?
இந்தியா எதற்கும் தயாராக உள்ளது. ராணுவத் தாக்குதல் நடத்துவதாக இருந்தால் அதை வெளிப்படையாக சொல்லி விட்டுச் செய்ய முடியாது.
அதை பத்திரிக்கையாளர்களிடம் சொல்லி விட்டுச் செய்ய முடியாது. அப்படிச் செய்வது ராணுவ நடவடிக்கை அல்ல. அரசு அனைத்து வாய்ப்புகளையும் பரிசீலனையில் வைத்துள்ளது என்றார் முகர்ஜி.
-
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது!












Click it and Unblock the Notifications