சிறுமி பலாத்கார வழக்கில் 3 பேர் கைது
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் 15 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ளது கொடிகளம். இந்த பகுதியைச் சேர்ந்தவர் தனபால். இவரது மகள் மாலதி (15).
மாலதி மீது அதே பகுதியில் வசிக்கும் மோகன் என்பவர் ஒரு தலையாக காதல் கொண்டார். ஆனால் மாலதி அந்தக் காதலை நிராகரித்தார்.
ஆனாலும் விடாமல் மாலதியை தொடர்ந்துள்ளார் மோகன். இதை மாலதி விரும்பவில்லை. இதனால் ஆவேசம் அடைந்த மோகன் தனது நண்பர்கள் சின்னராசு, முல்லை நாதன் ஆகியோர் உதவியுடன் மாலதியை, தனது வீட்டிற்கு தூக்கிச் சென்று அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதையடுத்து மாலதியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மோகன், சின்னராசு, முல்லை நாதன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications