கஸாப் எழுதிய கடிதம்-பாக். தூதரிடம் ஒப்படைப்பு

மும்பை போலீசாரின் காவலில் உள்ளான் கஸாப். அவனை பாகிஸ்தானியே இல்லை என்று பாகிஸ்தான் அரசு கூறி வருகிறது. ஆனால் கஸாப் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவன் தான் என்பதற்கான அத்தனை ஆதாரங்களையும் மீடியாக்கள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.
இந்த நிலையில், கஸாப் சட்ட உதவி கோரி பாகிஸ்தான் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளான். இந்தக் கடிதத்தை மத்திய வெளியுவு அமைச்சகம் பாகிஸ்தான் தூதரிடம் ஒப்படைத்துள்ளது.
இந்தக் கடிதத்தில் தனக்கு சட்ட உதவிகள் செய்ய வேண்டும். தன்னுடன் தாக்குதலில் ஈடுபட்டு பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட இஸ்மாயில் கானின் உடலைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கோரியுள்ளான் கஸாப்.
மும்பை போலீஸாரால் இந்தக் கடிதம் வெளியுறவு அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று பாகிஸ்தான் தூதராக பொறுப்பு வகிக்கும் அஸ்ரபியாப், வெளியுறவு அமைச்சகத்திற்கு வரவழைக்கப்பட்டு அவரிடம் இந்தக் கடிதம் ஒப்படைக்கப்பட்டது.
பாகிஸ்தான் விவகாரங்களுக்கான இணை செயலாளர் ராகவன், அஜ்மல் கடிதத்தை பாகிஸ்தான் தூதரிடம் வழங்கினார்.
கஸாப் அடையாளம் - பாக்.குக்கு ஆதாரம் வேண்டுமாம்:
கடிதம் பெறப்பட்டதை பாகிஸ்தான் அரசு நேற்று உறுதிப்படுத்தியது. இருப்பினும் கஸாப் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவன்தான் என்பதற்கான ஆதாரத்தையும் இந்தியா தர வேண்டும் என கோரியுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்தக் கடிதத்தை எழுதியதால் மட்டும் கஸாப் பாகிஸ்தான் நாட்டவர் என்று ஆகி விட முடியாது. அதற்கான ஆதாரங்கள் தேவை.
கஸாப் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்தான் என்பதை நிரூபிக்கும் ஆதாரத்தை இந்தியா வழங்க வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications