செலவுக்கு பணம் தராததால் தாயை கொன்ற மகன்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லையை அடுத்த பேட்டை காந்தி நகரை சேர்ந்த விவசாயி முத்துராமலிங்கம். இவரது மனைவி பரிமளம்.

இவர்களது மகன்கள் ரமேஷ் என்ற நல்லதம்பி, சண்முகநாதன், வினோத்ராஜா. இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். ரமேஷ் எலெக்ட்ரிக் கடையில் வேலை பார்த்து வருகிறார். சண்முகநாதன் சட்டக் கல்லூரியிலும், வினோத் ராஜா ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.

பரிமளம் தினமும் சண்முகநாதன் கல்லூரிக்கு செல்லும்போது செலவிற்கு 50 ரூபாயும், வினோத் ராஜாவுக்கு 10 ரூபாயும் கொடுப்பாராம்.

அண்ணனை போல தனக்கும் 50 ரூபாய் தருமாறு வினோத்ராஜா தாயுடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இந்நிலையில் நேற்றும் ரூ.50 கேட்டு தகராறு செய்தார்.

இதை பரிமளம் ஏற்க மறுக்கவே வினோத்ராஜா அரிவாளால் தாயை சராமரியாக வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே பரிமளம் இறந்தார்.

சத்தம் கேட்டு ஓடி வந்த அண்டை வீட்டினர் வினோத் ராஜாவை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+