இந்தியா தாக்கினால் பாகிஸ்தானுக்கு உதவுவோம்-தலிபான்

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உதவியோடு ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்து அந்த நாட்டையே குட்டிச்சுவராக்கிய தலிபான்களை அமெரிக்கா தலைமையிலான படைகள் விரட்டியடித்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தின.
ஆனாலும் அங்கு தலிபான்களின் தாக்குதல் தொடர்ந்து கொண்டேவுள்ளது. பாகிஸ்தானின் வசீர்ஸ்தான் எல்லைப் பகுதியில் இருந்தபடி இவர்கள் அமெரிக்கப் படைகளை தொடர்ந்து தாக்கி வருகின்றனர்.
இதையடுத்து அமெரிக்கா-நேடோ படைகள் இவர்களை இரவு பகலாக தாக்கி வருகின்றன.
இந் நிலையில் தலிபான் அமைப்பின் முக்கிய கூட்டாளியான தெஹ்ரீக் இ தலிபான் பாகிஸ்தானின் தலைவர் பைதுல்லா மெஹ்சூத் ரகசிய இடத்தில் இருந்தபடி பாகிஸ்தானின் முக்கிய பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டி:
பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் தொடுத்தால் நாங்கள் பாகிஸ்தான் படைகளுடன் இணைந்து இந்தியாவை தாக்க தயாராக உள்ளோம். எங்களிடம் போர்ப் பயிற்சி பெற்ற ஆயிரக்கணக்கான வீரர்கள் உள்ளனர்.
தற்கொலைப் படையைச் சேர்ந்த எங்கள் வீரர்கள் ஏற்கனவே இந்திய எல்லைப் பகுதியில் நிலை கொள்ள ஆரம்பித்துவிட்டனர். அவர்கள் தற்கொலைத் தாக்குதல் நடத்தி இந்தியப் படைகளைத் தடுப்பர்.
தலிபான் எதிர்பார்த்து காத்திருந்த ஜிஹாத் போருக்கான நேரம் வந்துவிட்டது.
உலகின் ஒரே அணு ஆயுத இஸ்லாமிய நாடான பாகிஸ்தானை ஒழித்துக் கட்ட கண்ணுக்குத் தெரியும், தெரியாத எதிரிகளை நாங்கள் நன்கறிவோம். அவர்களை முஜாஹிதீன்கள் வெறியோடு எதி்ர்கொள்வார்கள் என்றார்.
இவனை ஆப்கான்-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அமெரிக்கப் படைகள் தேடி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications