மும்பையில் அமைதியான கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

நட்சத்திர ஹோட்டல்களிலும் கூட கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் வழக்கமான முறையில் இல்லை. அதேபோல புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கான புக்கிங்குளும் கூட கடந்த காலங்களைப் போல இந்த முறை இல்லை.
மும்பை ஹோட்டல்களில் இந்த ஆண்டு 30 முதல் 40 சதவீதம் வரை புக்கிங்குகள் குறைந்துள்ளன. பெரிய ஹோட்டல்கள் பலவற்றில் புத்தாண்டுக்காக வருவோர் குறைந்து விட்டதால் அறைகள் நிரம்பாமல் உள்ளதாக மேற்கு இந்திய ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்டாரன்ட் உரிமையாளர்கள் சங்க செயலாளர் கோர்டே கூறியுள்ளார்.
மும்பை மற்றும் அண்டையில் உள்ள கோவா மாநிலத்திலும் ஹோட்டல்கள் பலவும் புக்கிங் இல்லாமல் வெறிச்சோடிக் கிடக்கின்றன.
இந் நிலையில் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ், மும்பையில் மட்டும் வழக்கமான அளவில் இல்லாமல், அமைதியான முறையில் கொண்டாடப்படுகிறது.
தேவாலயங்களில் தீவிரவாதம் மறைந்து, அன்பும், அமைதியும் நிலவ கோரி பிரார்த்தனை செய்யப்பட்டது. மும்பை தாக்குதலில் இறந்தோருக்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
தமிழகத்தில் உற்சாகம்...:
தமிழகத்தில் கிறிஸ்துமஸ் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
சென்னை மாநகரம் உள்பட தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் நள்ளிரவுப் பிரார்த்தனை வழக்கமான உற்சாகத்துடனும், பாரம்பரியத்துடனும் நடந்தது.
இன்று காலை புத்தாடை அணிந்து கிறிஸ்தவ சமுதாயத்தினர் தேவாலயங்களில் நடந்த சிறப்புப் பிரார்த்தனைகளில் கலந்து கொண்டனர்.
மாநிலம் முழுவதும் உள்ள தேவாலயங்கள் விளக்கலங்காரத்தில் ஜொலித்தன.












Click it and Unblock the Notifications