பிரசிடென்சி கல்லூரி விழாவில் மோதல்-பஸ் உடைப்பு
சென்னை: சென்னை பிரசிடென்சி கல்லூரி மாணவர்கள் பேரவைத் தொடக்க விழாவின்போது இரு பிரிவு மாணவர்களுக்கிடையே மோதல் மூண்டது. இதில் சாலையில் போய்க் கொண்டிருந்த பஸ் மீது கல்வீசி தாக்கினர். இதுதொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை மாநில (பிரசிடென்சி) கல்லூரியில் கடந்த செப்டம்பர் மாதம் மாணவர் பேரவை தேர்தல் நடந்தது. இதில் பிரசாத் என்பவர் தலைவராகவும், சிலம்பரசன் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர். பேரவையின் நிர்வாகிகள் நேற்று பொறுப்பேற்று கொண்டனர்.
பேரவை தொடக்க விழா நேற்று காலை 10.00 மணிக்கு தொடங்கி பகல் 12.00 வரை நடந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு எம்.பி. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசினார். பின்னர் மாலை 3.00 மணி அளவில் கல்லூரி வளாகத்தில் உள்ள ஆடிட்டோரியத்தில் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சி உச்சக்கட்டத்தில் இருக்கும்போது மாலை 4.00 மணி அளவில் திடீரென்று மின்சாரம் துண்டிக்கப்பட்டது. யாரோ மாணவர் ஒருவர் பீஸை பிடுங்கி, மின்சார இணைப்பை துண்டித்து விட்டதாக மாணவர்கள் மத்தியில் பேச்சு எழுந்தது.
இதையொட்டி மாணவர்கள் இரு பிரிவாக பிரிந்து அடிதடி மோதலில் இறங்கினர். இதனால் அரங்கே அமளி துமளியாக மாறியது. இதையடுத்து இசை நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.
கல்லூரி முதல்வரும், ஆசிரியர்களும் தலையிட்டு மாணவர்களை அமைதியாக கலைந்து போகச் சொன்னார்கள். உடனே மாணவர்கள் ஆடிட்டோரியத்தை விட்டு வெளியே வந்தனர்.
கல்லூரி வளாகத்தில், மாணவர்களிடையே மீண்டும் மோதல் வெடித்தது. இதனால் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. துணை கமிஷனர் கணேசமூர்த்தி, உதவி கமிஷனர் சோமசுந்தரம் ஆகியோர் போலீஸ் படையுடன் கல்லூரிக்கு விரைந்தனர்.
போலீசார் மோதலில் ஈடுபட்ட மாணவர்களை சமாதானப்படுத்தினார்கள். அப்போது போலீசாருக்கும், மாணவர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. பின்னர் மாணவர்கள் திரண்டு வெளியே சாலைக்கு வந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த 27-பி மாநகர பஸ் மீது சரமாரியாக கல் வீசப்பட்டது. உடனடியாக பஸ் நிறுத்தப்பட்டது. பஸ்சில் இருந்த பயணிகள் இறங்கி அலறியடித்து ஓடினார்கள்.
சுமார் ஒரு மணி நேரம் மாணவர்கள் மோதலால் அந்தப் பகுதியே கலவர பூமியா காணப்பட்டது.
கல்லூரியில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அண்ணா சதுக்கம் போலீசார் பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்ததாக வழக்கு பதிவு செய்தனர்.
முனிவேலு, கண்ணன், ஆனந்தன் ஆகிய மூன்று பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். சட்டக் கல்லூரியில் நடந்த மாணவர்கள் கலவரத்தால் பெரும் பிரச்சினை ஏற்பட்டதுபோல இந்த சம்பவத்திலும் பிரச்சினை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக போலீசார் உடனடி நடவடிக்கையில் இறங்கினார்கள்.
-
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ












Click it and Unblock the Notifications