முல்லைத்தீவு-புலிகள் ரன்வேயை பிடித்த ராணுவம்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: முல்லைத்தீவில் நடந்த கடும் சண்டையின்போது விடுதலைப் புலிகளின் விமான ஓடு பாதையை பிடித்துள்ளதாக ராணுவம் அறிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளின் அரசியல் தலைமையகம் அமைந்துள்ள கிளிநொச்சி நகரை கைப்பற்றுவதற்கு தாக்குதல்கள் தீவிரப்படுத்தப் பட்டதையடுத்து ராணுவத்திற்கும், புலிகளுக்கும் இடையேயான சண்டை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

நேற்று வட பகுதியில் உள்ள புலிகளுடைய முக்கிய நிலைகள் மீது விமானங்கள் மூலம் குண்டுவீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதாக விமானப்படை செய்தித் தொடர்பாளர் ஜனக நாணயகாரா தெரிவித்தார்.

கிளிநொச்சியில் உள்ள பரந்தன் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள முகமாலை ஆகிய இடங்களில் இந்த விமான தாக்குதல்கள் நடத்தப் பட்டதாகவும், நேற்று முன்தினம் விடுதலைப் புலிகளின் வான்படைப் பிரிவு பயன்படுத்தி வந்த விமான ஓடுபாதை ஒன்றை கைப்பற்றி இருப்பதாகவும் ராணுவ செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் உதய நாணயகாரா கூறினார்.

புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 3வது விமான ஓடுபாதை இது என்றார் அவர்.

மேலும் விமானப்படை நடத்திய குண்டுவீச்சில் பரந்தன்- முல்லைத்தீவு சாலையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றும் கான்வென்ட் ஒன்றும் சேதமடைந்ததாகவும் விமானப்படை பயன்படுத்திய 'கிளஸ்டர் பாம்ஸ்' குண்டுகளால் அதிக இடங்களில் பாதிப்பு ஏற்பட்டதாகவும் புலிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், விமானப்படை குண்டு வீச்சில் 85 பசு மாடுகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+