சத்யம் பங்குகள் விலை உயர்வு: மாறுகிறது தலைமை?

இன்று பிற்பகலில் சத்யம் பங்குகளின் மதிப்பு 145.80 ஆக இருந்தது. இது கடந்த வெள்ளியன்று நிலவிய விலையை விட 8 சதிவிகிதம் அதிகமாகும்.
சத்யம் தலைவர் ராமலிங்க ராஜூ, நிறுவனத்தில் உள்ள தனது பங்குகளை கணிசமாகக் குறைத்துக் கொள்ளவிருப்பதாகவும், நிர்வாகத்தை புதிய இயக்குனர்கள் குழுவிடமே ஒப்படைப்பதாகவும் பேச்சுக்கள் எழுந்துள்ளதால், இந்தப் பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மன்னிப்பு கேட்க முடியாது-உலக வங்கி:
இந் நிலையில் சத்யம் நிறுவனத்திடம் மன்னிப்பு கேட்க முடியாது என உலக வங்கி அறிவித்துள்ளது.
சமீபத்தில், தங்கள் வங்கி கணக்குகளை நிர்வகிப்பதில் சத்யம் குளறுபடிகள் செய்ததாகக் கூறி 8 ஆண்டுகள் அந்நிறுவனத்துக்கு தடை விதித்தது உலக வங்கி.
இதனால் சத்யம் நிறுவனத்தின் பெயர் கெட்டதுடன், பங்குகள் மதிப்பும் சரிந்தது. எனவே உலக வங்கி தனது செயலுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என சத்யம் நிறுவனம் கோரியிருந்தது.
இதற்கு பதிலளித்துள்ள உலக வங்கி, 'சத்யம் நிறுவனம் செய்த தவறைத்தான் வெளிப்படுத்தினோம். நியாயமாக சத்யம்தான் மன்னிப்புக் கேட்க வேண்டும். எங்களுக்கு அந்த அவசியமில்லை என பதிலளித்துள்ளது.












Click it and Unblock the Notifications