மீண்டது சென்செக்ஸ்!
மும்பை: இந்தியப் பங்குச் சந்தையின் இந்த வாரத் துவக்கமே பெரும் சரிவில் துவங்கியது. ஆனாலும் பின்னர் சுதாரித்துக் கொண்டது.
வாரத்தின் முதல்நாளான இன்று சென்செக்ஸ் 137 புள்ளிகள் மைனஸில் துவங்கியது. தேசிய பங்குச் சந்தை நிப்டியிலும் அதே வீழ்ச்சிப் போக்குதான்.
ஐடி துறையின் பங்குகள் சரிவைச் சந்தித்தன. இன்போஸிஸ், டிசிஎஸ், விப்ரோவின் பங்குகள் 2 முதல் 4 சதவிகிதம் வரை சரிவைச் சந்தித்தன.
பிஎச்இஎல், பார்தி ஏர்டெல், மாருதி சுசுகி, ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ, எச்டிஎப்சி மற்றும் டிஎல்எப் பங்குகள் ஏற்றம் கண்டன.
ஆனாலும் துவக்க நேரத்தில் இழந்த புள்ளிகளை திரும்பப் பெற்றது பங்குச் சந்தை. வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 204 புள்ளிகள் கூடுதலாகப் பெற்றது.
சத்யம் நிறுவனப் பங்குகள் 10 சதவிகித விலை உயர்வைக் கண்டன. அதே போல ரான்பாக்ஸி நிறுவனப் பங்குகளும் நல்ல உயர்வு கண்டன.
பங்குச் சந்தை முடிவு நேர நிலவரம்: சென்செக்ஸ் 9533 (204.60), நிப்டி: 2922 (64.95)












Click it and Unblock the Notifications