ரூ. 20 லட்சம் லஞ்சம்: இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
சென்னை: ரூ. 20 லட்சம் லஞ்சம் கேட்டதாக புகார் கூறப்பட்ட இன்ஸ்பெக்டரை சென்னை போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்து அதிரடி உத்தரவிட்டார்.
சென்னை காவல்துறை அதிகாரிகள், குறிப்பாக லஞ்சம் வாங்குவோர் கதி கலங்கிப் போயுள்ளன். காரணம், சமீப காலமாக அடுத்தடுத்து லஞ்ச ஒழிப்புப் போலீஸார் நடத்தி வரும் ரெய்டுகளும், கையும் களவுமாக பிடித்து வருவதுமே.
ஆண், பெண் என பாரபட்சமே இல்லாமல் லஞ்சம் வாங்கும் காவல்துறை அதிகாரிகளை வளைத்து வளைத்து லஞ்ச ஒழிப்புப் போலீஸார் பிடித்து வருகின்றனர்.
இதுதவரை 2 இன்ஸ்பெக்டர்கள், 5 சப்-இன்ஸ்பெக்டர்கள், காவல்துறை ஆணையர் அலுவலக கண்காணிப்பாளர் என லஞ்சம் வாங்கியோர் சிக்கியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஆணையர் ராதாகிருஷ்ணன்,
உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பினார். அதில், லஞ்சம் வாங்குபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவு போட்டார்.
இந்த நிலையில் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் ஒருவர் மீது கமிஷனரே நேரடி நடவடிக்கையில் இறங்கி அவரை சஸ்பெண்ட் செய்துள்ளார்.
சஸ்பெண்ட் ஆன இன்ஸ்பெக்டரின் பெயர் மார்ட்டின் ராபர்ட். மத்திய குற்றப்பிரிவு போலீசில் மோசடி தடுப்பு பிரிவில் பணியாற்றினார்.
சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த ரூபி மனோகரன் என்பவர் போலீஸ் கமிஷனரிடம் இவர் மீது புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அதில், நான் நிலம் வாங்கி கொடுக்கும், வீடு கட்டி கொடுக்கும் காண்டிராக்டு நிறுவனம் நடத்தி வருகிறேன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணபதி என்பவர் என் மீது போலீசில் புகார் ஒன்றை கொடுத்தார். நிலம் வாங்கி கொடுப்பதாக வாங்கிய 1 கோடி ரூபாயை நான் ஏமாற்றி விட்டதாக புகாரில் கூறி இருந்தார். இந்த புகார் மனு மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் ராபர்ட் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்.
இந்த வழக்கில் ரூ.2 கோடியே 60 லட்சம் ரூபாயை வட்டியோடு சேர்த்து கொடுக்க வேண்டும் என்றும், அதோடு என்னை கைது செய்யாமல் இருக்க, ரூ.20 லட்சம் லஞ்சமாகவும் இன்ஸ்பெக்டர் கேட்டார். அவர் கேட்ட பணத்தை கொடுத்ததால் என்னை கைது செய்யாமல் விட்டார். அவர் மீது விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து உதவி ஆணையர் ஒருவரை இதுகுறித்து விசாரிக்க ஆணையர் உத்தரவிட்டார். மேலும் ராபர்ட் வேறு பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
விசாரணையில் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் ராபர்ட் லஞ்சம் வாங்கியது உண்மை என்பது நிரூபணமானது.
இதையடுத்து முதல் கட்ட விசாரணை அறிக்கை கமிஷனரிடம் கொடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் கமிஷனர் ராதாகிருஷ்ணன் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் ராபர்ட்டை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
மேலும் இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் ஒருவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையி்ல் ராபர்ட் மீது மேல் நடவடிக்கை (கைது, விசாரணை) இருக்கும் எனத் தெரிகிறது.
-
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
சொத்து வரியின் பயன்கள்.. இது எப்படி கணக்கிடப்படுகிறது? வரி கட்டாவிட்டால் ஜப்தி வருமா? அறியாத தகவல் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான்












Click it and Unblock the Notifications