சென்செக்ஸ்: ஆண்டின் கடைசி நாளிலும் நஷ்டம்!
Subscribe to Oneindia Tamil
மும்பை: வருடத்தின் கடைசி நாளான இன்று, இந்த ஆண்டைப் போலவே மோசமாக இருந்தது பங்குச் சந்தை வர்த்தகம்.
துவக்க நேரத்தில் சுமாரான வர்த்தகம் தெரிந்தாலும், பிற்பகலில் டல்லடித்தது. மாலையில் 84 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 9631-ல் நிலை கொண்டது. கச்சா எண்ணெய், எரிவாயு தொடர்பான பங்குகள் விலை சரிந்தது. ஆட்டோ மொபைல் மற்றும் மூலதனப் பொருட்களின் பங்குகள் ஒரளவு விலை போயின.
தேசியப்பங்குச் சந்தைக் குறியீட்டெண்ணும் சரிந்து காணப்பட்டது. 21 புள்ளிகள் குறைந்து 2937-ல் நிலைபெற்றது நிப்டி.
இன்றைய வர்த்தகத்தில் அதிக லாபத்தில் கைமாறியது சத்யம் கம்ப்யூட்டர் நிறுவன பங்குகள். வங்கித் துறைபே பங்குகள் அனைத்துமே வீழ்ச்சி கண்டன இன்று.












Click it and Unblock the Notifications