கஸாப் பாகிஸ்தானியாக இருக்கலாம், ஆனால் ஆதாரம் இல்லையே: பாக். பாதுகாப்பு ஆலோசகர்
இஸ்லாமாபாத்: மும்பையில் பிடிபட்டுள்ள தீவிரவாதி அஜ்மல் கஸாப், பாகிஸ்தான் குடிமகன் இல்லை என்று ஒரேயடியாக மறுத்து விட முடியாது என்று பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மஹமூத் அலி துரானி கூறியுள்ளார்.
மும்பைத் தாக்குதலுக்கும், பாகிஸ்தானுக்கும் தொடர்பே இல்லை என்று பாகிஸ்தான் அரசு தொடர்ந்து கூறி வருகிறது. அதை விட உச்சமாக, மும்பைத் தாக்குதலில் ஈடுபட்டு கைதாகியுள்ள தீவிரவாதி கஸாப், பாகிஸ்தான் நாட்டவனே அல்ல என்றும் அது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், கஸாப் பாகிஸ்தானியாக இருக்கக் கூடும் என்று அந்த நாட்டு பாதுகாப்பு ஆலோசகர் துரானி கூறியிருக்கிறார்.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், இருக்கலாம். இல்லை என்று நான் ஒரேயடியாக மறுக்கவில்லை. ஆனால் எங்களிடம் ஆதாரம் இல்லை.
இந்த நிமிடம் வரை மும்பைத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தான் நாட்டவர்தான் என்று கூறுவதற்கான எந்த ஆதாரமும் இல்லை. இந்தியா முதலில் விசாரணையை நடத்தி முடிக்கட்டும்.
கஸாப் எழுதிய கடிதம் எங்களுக்குக் கிடைத்துள்ளது. அதை அரசு பரிசீலித்துக் கொண்டிருக்கிறது. அதற்குப் பதில் அனுப்புவது குறித்தும் பரிசீலனை நடந்து கொண்டிருக்கிறது.
இந்தியாவைப் போலவே தீவிரவாதத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடு பாகிஸ்தான். அதை யாரும் மறந்து விடக் கூடாது.
இந்தியாவுடன் நட்புறவையே விரும்புகிறது பாகிஸ்தான். இரு நாடுகளும் தங்களுக்குள் நிலவும் அவ நம்பிக்கையை பின்னால் போட்டு விட்டு தீவிரவாதத்தை எதிர்த்து இணைந்து போராட முன்வர வேண்டும்.
இரு நாடுகளும் அமைதியாக வாழ நட்புறவும், தோழமையும் அவசியம். இது இரு நாடுகளுக்கு மட்டுமல்ல, இந்தப் பிராந்தியத்திற்கே நல்லது என்றார் துரானி.
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications