தீவிரவாதத்திற்கு எதிராக எந்த எல்லை வரையும் செல்வோம் - பிரதமர்
டெல்லி: தீவிரவாதத்தை வேரறுக்க எந்த எல்லை வரையும் செல்ல இந்தியா தயார் என பிரதமர் மன்மோகன் சிங் திடீரென கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் பேசுகையில், தீவிரவாதத்தை வேரறுக்க எந்த எல்லை வரையும் செல்ல இந்தியா தயாராக உள்ளது. ஆயுதங்களை எடுப்பதால் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது.
பாகிஸ்தான் அரசு, தீவிரவாதத்தை வேரறுப்பதில் அக்கறை காட்ட வேண்டும். அதற்குரிய பாதையில் அது செல்லும் என நம்புகிறோம்.
அதேபோல, புதிய வங்கதேச அரசு, வங்கதேச மண்ணை இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத செயல்களுக்கு யாரும் பயன்படுத்துவதை அனுமதிக்காது என்று நம்புகிறோம். அதற்குத் தேவையான நடவடிக்கைகளை வங்கதேச அரசு எடுக்கும் என நம்புகிறோம்.
மும்பைத் தாக்குதலுக்குக் காரணமான தீவிரவாதிகளை, குற்றவாளிகளை இந்தியாவிடம் பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும்.
தீவிரவாதமும், நக்சலிசமும் பெருகி வருவது கவலை அளிக்கிறது. தீவிரவாதத்துடன் அரசு எந்த வகையிலும் சமரசம் செய்து கொள்ளாது.
மும்பை, டெல்லி,அஸ்ஸாம் குண்டுவெடிப்புகள் நமக்குப் பின்னடைவுதான். ஆனால் தீவிரவாதத்தை நாட்டை விட்டு வேரறுக்க எந்த எல்லை வரையும் செல்ல நாங்கள் தயாராக உள்ளோம்.
தீவிரவாத அமைப்புகள் முதலில் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும். ஆயுதங்களுடன் இருப்போரிடம் அரசு பேச முடியாது.ஆயுதங்களால் எதற்கும் தீர்வு காண முடியாது.
ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு, இந்திய குடிமக்களாக அவர்கள் வருவார்களேயானால் அவர்களுடன் பேச அரசு தயாராக உள்ளது என்றார் சிங்.
-
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ்












Click it and Unblock the Notifications