புத்தாண்டு: பெண்களிடம் சில்மிஷம்-7 பேர் கைது
சென்னை: கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற பெண்களிடம் புத்தாண்டு வாழ்த்து கூறுவதாக கூறி சில்மிஷம் செய்த புத்தாண்டு வாழ்த்து சொல்வதாக கூறி பெண்களிடம் சில்மிஷம் செய்ய முயன்றதாக 7 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னையை அடுத்த நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் நேற்று முன்தினம் தனது குடும்பத்தினருடன் கோயிலுக்கு சென்றார். அப்போது இளைஞர்கள் சிலர் அவரை வழி மறித்து புத்தாண்டு வாழ்த்து கூறுவதாக சொல்லி அவருடன் வந்திருந்த பெண்களிடம் சில்மிஷம் செய்ய முயன்று உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து செந்தில்குமார் மதுரவாயல் போலீசில் புகார் செய்துள்ளார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் வழக்குப்பதிவு செய்து பெண்களிடம் சில்மிஷம் செய்ய முயன்ற இளைஞர்கள் பிரசன்னா, வினோத், நாசர், முருகானந்தம், காந்திராஜ், வெங்கடேஷன், மணிகண்டன் ஆகிய 7 பேரை கைது செய்தார்.