நீதிபதியைக் கடித்த நாய் சாவு
சண்டிகர்: நீதிபதியைக் கடித்த பின் நாய் இறந்தது.
சண்டிகர் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதியாக இருப்பவர் கார்க். இவர் 24வது செக்டாரில் உள்ள சனாதம் தரம் கோவிலில் பக்தர்களுக்கு இலவச பால் மற்றும் பிற உணவுப் பொருட்களை வழங்கும் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
பக்தர்களுக்கு கார்க் பால் உள்ளிட்டவற்றை வழங்கிக் கொண்டிருந்தபோது ஒரு தெரு நாய் படு வேகமாக அவரை நோக்கி ஓடி வந்து காலில் கடித்து விட்டது.
இதையடுத்து கார்க்கின் குடும்பத்தினர் அவரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
நீதிபதியை நாய் கடித்த தகவல் அறிந்ததும், போலீஸார் மாநகராட்சி அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். அவர்கள் 24வது செக்டாருக்கு விரைந்து சென்ற கார்க்கை கடித்த நாயைப் பிடித்தனர்.
அப்போது நாய் இறந்து போனது. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நீதிபதி கார்க்குக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு முன்னெச்சரிக்கையாக தடுப்பூசியும், இம்யூனோகுளோபுலின் ஊசியும் போடப்பட்டது. தற்போது கார்க் ஸ்திரமாக இருப்பதாகவும் விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நாய் ரேபிஸ் நோய் தாக்கப்பட்ட நாயாக இருக்கலாம் என டாக்டர்கள் சந்தேகிக்கின்றனர்.