திருமங்கலத்தில் 'ரவுடிகள் ராஜ்யம்'-சு.சுவாமி
சென்னை: திருமங்கலம் இடைத் தேர்தலில் ரவுடிகள் ராஜ்யம் நடந்து கொண்டிருப்பதாக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறினார்.
நிருபர்களிடம் பேசிய அவர்,
திருமங்கலம் தொகுத இடைத்தேர்தலில் ரவுடிகள் ராஜ்யம் நடந்து கொண்டிருக்கிறது. உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினே வாக்காளர்களுக்கு கட்டு கட்டாக பணம் கொடுக்கிற காட்சிகள் வெளியாகியுள்ளது.
இதன் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்கு பதிவன்று மத்திய ரிசர்வ் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.
மும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு குறித்த ஆதாரங்களை சொல்வதற்காக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் சிதம்பரம் அமெரிக்கா செல்ல இருக்கிறார். அவர் அமெரிக்கா செல்லக்கூடாது.
ஒரு மத்திய அமைச்சரே அமெரிக்காவிடம் சென்று புகார் செய்வது என்பது 100 கோடி இந்திய மக்களை அவமதிக்கும் செயலாகும். பக்கத்து இருக்கை மாணவன் அடித்தான் என்று சக மாணவன், ஆசிரியரிடம் புகார் கூறுவது போல் இருக்கிறது. எனவே அவர் அமெரிக்கா செல்லக்கூடாது.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக அமைச்சர் ராஜா மீது வழக்கு தொடர அனுமதி கோரி பிரதமருக்கு கடிதம் எழுதினேன். இதுவரை பதில் கிடைக்கவில்லை. வரும் பிப்ரவரி 15க்குள் பதில் கிடைக்காவிட்டால் நீதிமன்றத்தை அணுகுவேன் என்றார் சுவாமி.












Click it and Unblock the Notifications