மேடாஸ் தலைவர் சின்ஹா ராஜினாமா!!
Subscribe to Oneindia Tamil
மும்பை: சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜூ மற்றும் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான மேடாஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து ஆர் சி சின்ஹா விலகிவிட்டார்.
தனது விலகல் கடிதத்தை அவர் செபிக்கும் அனுப்பியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தப் பதவி விலகலை மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேடாஸ் நிறுவனத்தின் சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜூவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் 36 சதவிகித பங்குகள் உள்ளன.
இந்த நிறுவனத்தைதான் சமீபத்தில் சத்யமுடன் இணைக்கு முற்பட்டு தோல்வி கண்டார் ராமலிங்க ராஜூ. தனது நிதி முறைகேடுகளை இந்த நிறுவனத்தை இணைப்பதன் மூலம் மறைக்க முடியும் என நம்பினார். ஆனால் முதலீட்டாளர்களின் கடும் எதிர்ப்பு அவரது முயற்சியை தோற்கடித்துவிட்டது.
ராமலிங்க ராஜூவின் மகன் கட்டுப்பாட்டில் உள்ளது இந்த மேடாஸ்.












Click it and Unblock the Notifications