கிளிநொச்சியில் விமானப்படை தாக்குதல் - 2 பள்ளிகள் நாசம்
கொழும்பு: விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்கப்பட்ட கிளிநொச்சி அருகே உள்ள முரசு மோட்டை என்ற இடத்தில் மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் இலங்கை விமானப்படை தாக்குதல் நடத்தியதில் 2 பள்ளிக்கூடங்கள் இடிந்து நாசமாயின.
தற்போது முல்லைத்தீவை நோக்கி ராணுவம் முன்னேறி வருகிறது. ஆனால் புலிகள் தரப்பிலிருந்து கடும் எதிர்த் தாக்குதல் நடத்தப்படுவதால், ராணுவத்தால் எளிதாக முன்னேற முடியவில்லை.
கிளிநொச்சியில் தற்போது மக்கள் யாரும் இல்லை. இந்த நிலையில், கிளிநொச்சியில் உள்ள முரசு மோட்டை பகுதியில் சிங்கள ராணுவத்தினர் அங்குள்ள முருகானந்தா மகா வித்யாலயா பள்ளி மீது குண்டு வீசினர். அங்குள்ள ரோமன் கத்தோலிக்க பள்ளி மீதும் ராக்கெட் தாக்குதல் நடத்தினர்.
இதில் அந்த 2 பள்ளிக் கட்டிடங்களும் இடிந்து தரை மட்டமானது. ஏராளமான வீடுகளும் சேதமடைந்து போயின.
விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து கடும் தாக்குதல் வெளிப்பட்டால், ஆத்திரத்தில் அப்பாவி மக்களைக் குறி வைத்து விமானத் தாக்குதலை நடத்துவது இலங்கையின் வழக்கம் என்பதால் இம்முறையும் அதுபோலவே தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
15,000 புலிகளை கொன்று விட்டோம்-பொன்சேகா:
இதற்கிடையே 2 ஆண்டுகளில் இதுவரை 15 ஆயிரம் விடுதலைப் புலிகள் வீரர்களை கொன்றிருப்பதாக ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் கடந்த 2 ஆண்டில் மட்டும் 15 ஆயிரம் விடுதலைப்புலிகளை கொன்று விட்டோம்.
ராணுவ தரப்பில் 2000 பேர் மட்டுமே உயிர் இழந்துள்ளனர். எந்த நாடும் இது போன்ற ஒரு போரை சந்தித்து இருக்க முடியாது. போர் என்றால் உயிர் இழப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியாது என்றார் பொன்சேகா.
பாளைக்கு வெளியே ராணுவம்:
இதற்கிடையே ஆனை இறவைப் பிடிக்கும் முயற்சியாக அதற்கு அருகில் உள்ள பாளை என்ற பகுதிக்கு அருகே இலங்கை ராணுவத்தின் 53 மற்றும் 55வது படைப் பிரிவுகள் நிலை கொண்டுள்ளன என்று பாதுகாப்புத்துறை செய்தித்தொடர்பாளர் உதய நாணயக்காரா கூறியுள்ளார்.
டேங்குகள் மற்றும் ஆர்ட்டிலரி துணையுடன் படைப் பிரிவினர் முன்னேறி வருகின்றனர். பாளையிலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் அவர்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications