மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸ் இல்லை - முலாயம் சிங்
Subscribe to Oneindia Tamil
மணிப்பூரி (உ.பி): மும்பைத் தாக்குதல் தொடர்பாக, பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்கும் விவகாரத்தில் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை சமாஜ்வாடி கட்சி வாபஸ் பெறாது என்று சமாஜ்வாடிக் கட்சியின் தலைவரான முலாயம் சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் மீது மத்திய அரசு உடனடியாக போர் தொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை சமாஜ்வாடி திரும்பப் பெறும் என இரண்டு நாட்களுக்கு முன்பு சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளர் அமர்சிங் எச்சரித்திருந்தார்.
இந்த நிலையில் உ.பி. மாநிலம் மணிப்பூரியில் செய்தியாளர்களிடம் பேசிய முலாயம் சிங் யாதவ், அரசுக்கு அளித்து வரும் ஆதரவைத் திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்றார்.
இதுதொடர்பாக அமர்சிங் விடுத்த எச்சரிக்கையையும் அவர் மறுத்தார். அமர்சிங் அப்படிக் கூறவில்லை என்றார் முலாயம் சிங்.












Click it and Unblock the Notifications