புலிகளின் மேலும் ஒரு ரன்வே பிடிபட்டது
முல்லைத்தீவு மாவட்டம் முல்லியவளை என்ற நகரிலிருந்து ஆறரை கிலோமீட்டர் தொலைவில் இந்த ரன்வே உள்ளது.
ராணுவத்தின் 59வது படைப்பிரிவு இந்த ரன்வேயைப் பிடித்துள்ளது. ஏற்கனவே புலிகளின் 3 ரன்வேக்களை ராணுவம் பிடித்துள்ளதாக ஏற்கனவே தெரிவித்துள்ளது என்பது நினைவிருக்கலாம்.
லெப்டினென்ட் கர்னல் ஜனக அரியரத்னே தலைமையிலான இலங்கை சிங்க ரெஜிமென்ட் பிரிவினர் தற்போதைய ரன்வேயைப் பிடித்துள்ளனர்.
ரன்வேயைத் தற்காத்துக் கொள்ள புலிகள் தரப்பு கடுமையாக போராடியது. இதனால் ராணுவத்தின் முயற்சி தாமதப்பட்டது. இந்த நிலையில் நேற்று இந்த விமான ஓடுதளம் ராணுவத்தின் கைவசம் வந்தது.
கைப்பற்றப்பட்டுள்ள ரன்வே, 2000 மீட்டர் நீளமும், 20 மீட்டர் அகலமும் கொண்டதாக உள்ளது.
முதன் முதலில் பனிக்கன்குளம் என்ற இடத்தில் புலிகளின் ரன்வே பிடிபட்டது. 2வது ரன்வே நிவில் பகுதியிலும், 3வது ரன்வே இரணமடு பகுதியிலும் சிக்கியது. தற்போது நான்காவது ரன்வேயையும் ராணுவம் கைப்பற்றியுள்ளது.













Click it and Unblock the Notifications