For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகர சங்கராந்தி: கங்காசாகரில் 2 லட்சம் பக்தர்கள் தவிப்பு

By Sridhar L
Google Oneindia Tamil News

கொல்கத்தா: மகர சங்கராந்தியை முன்னிட்டு கங்காசாகர் தீவில் புனித நீராடச் சென்ற 2 லட்சம் பக்தர்கள், அங்கு நிலவிய கடும் பனி மூட்டம் காரணமாக திரும்பி வர முடியாமல் தவிப்புக்குள்ளாகினர்.

கொல்கத்தாவுக்கு 150 கி.மீ., தெற்கே, வங்க கடலில் கங்கை நதி கலக்கும் இடம் தான் கங்காசாகர் தீவு. இந்துக்களின் புனித தலமான இங்கு ஆண்டுதோறும் மகர சங்கராந்தி பண்டிகை அன்று ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி கபில முனிவரை வழிபடுவர்.

இந்தாண்டும் கங்காசாகரில் ஜன சமுத்திரத்தை காண முடிந்தது. காலையில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் படகுப் போக்குவரத்தும், சாலைகளில் வாகனப் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

கங்காசாகர் முதல் கச்சுபெரியா வரையிலான 30 கிலோமீட்டர் தொலைவுக்கு கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

வாகனங்கள் நெருக்கியடித்தபடி ஸ்தம்பித்து நின்றன. கங்காசாகர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இரு வாகனங்கள் பனி மூட்டம் காரணமாக மோதிக் கொண்டன.

கங்காசாகரில் 1.5 லட்சம் பேரும், கச்சுபெரியாவில் 50 ஆயிரம் பேரும் வீடு திரும்ப முடியாமல் நீண்ட நேரம் தவிக்கும் நிலை ஏற்பட்டது.

மதியத்திற்குப் பின்னர்தான் நிலைமை படிப்படியாக சரியானது.

கொல்கத்தா: மகர சங்கராந்தியை முன்னிட்டு கங்காசாகர் தீவில் புனித நீராடச் சென்ற 2 லட்சம் பக்தர்கள், அங்கு நிலவிய கடும் பனி மூட்டம் காரணமாக திரும்பி வர முடியாமல் தவிப்புக்குள்ளாகினர்.

கொல்கத்தாவுக்கு 150 கி.மீ., தெற்கே, வங்க கடலில் கங்கை நதி கலக்கும் இடம் தான் கங்காசாகர் தீவு. இந்துக்களின் புனித தலமான இங்கு ஆண்டுதோறும் மகர சங்கராந்தி பண்டிகை அன்று ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி கபில முனிவரை வழிபடுவர்.

இந்தாண்டும் கங்காசாகரில் ஜன சமுத்திரத்தை காண முடிந்தது. காலையில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் படகுப் போக்குவரத்தும், சாலைகளில் வாகனப் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

கங்காசாகர் முதல் கச்சுபெரியா வரையிலான 30 கிலோமீட்டர் தொலைவுக்கு கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

வாகனங்கள் நெருக்கியடித்தபடி ஸ்தம்பித்து நின்றன. கங்காசாகர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இரு வாகனங்கள் பனி மூட்டம் காரணமாக மோதிக் கொண்டன.

கங்காசாகரில் 1.5 லட்சம் பேரும், கச்சுபெரியாவில் 50 ஆயிரம் பேரும் வீடு திரும்ப முடியாமல் நீண்ட நேரம் தவிக்கும் நிலை ஏற்பட்டது.

மதியத்திற்குப் பின்னர்தான் நிலைமை படிப்படியாக சரியானது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X