இரண்டாகிறது சிட்டி குரூப்!
Subscribe to Oneindia Tamil

இது குறித்து சிட்டி குரூப் தலைமை நிர்வாகி விக்ரம் பண்டிட் கூறுகையில், இன்றைய சூழல் மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. லேமான் பிரதர்ஸ் வங்கி திவாலானதைத் தொடர்ந்து எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. இப்போது வங்கியைப் பிரிப்பதைத் தவிர இதைக் காப்பாற்ற வேறு வழியில்லை என்றார்.
இவ்வாறு பிரிக்கப்பட்ட பின்னர் சிட்டி கார்ப் வசமுள்ள அதிக நஷ்டத்தில் இயங்கும் பிரிவுகளை விற்றுவிடவும் பண்டிட் திட்டமிட்டுள்ளார்.
இதன்படி இந்தியாவில் வீட்டுக் கடன், பர்சனல் லோன் ஆகியவற்றை வழங்கி வரும் சிட்டி பைனான்சியல் பிரிவை சிட்டி வங்கி வி்ற்கும் எனத் தெரிகிறது.
கடந்த ஆண்டு சிட்டி பைனான்சியலின் இந்தியப் பிரிவு ரூ. 268 கோடி நஷ்டத்தை சந்தித்தது.












Click it and Unblock the Notifications