For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆஸ்திரேலியா அருகே தீவில் பூகம்பம்!

By Sridhar L
Google Oneindia Tamil News

நௌமியா: பசிபிக் பெருங்கடலில் இருக்கும் நியூ கலிடோனியா தீவுக்கு அருகே இந்திய நேரப்படி இன்று காலை 9.05 மணிக்கு பூகம்பம் ஏற்பட்டது.

பசிபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியாவுக்கு வடகிழக்கே இருக்கும் குட்டி தீவு நியூ கலிடோனியா. சுமார் 2.5 லட்சம் மக்கள் தொகை கொண்ட இத்தீவு தற்போது பிரான்ஸ் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இதன் தலைநகர் நௌமியாவில் இருந்து 450 கி.மீ., தொலைவில் பசிபிக் பெருங்கடலில் இந்திய நேரப்படி இன்று காலை 9.05 மணிக்கு பூகம்பம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

கடலுக்கு அடியில் பூகம்பம் ஏற்பட்டபோதும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

இது குறித்து ஆஸ்திரேலிய புவியியல் மைய பூகம்ப ஆராய்ச்சியாளர் கிளைவ் கோலின்ஸ் கூறுகையில், இந்த பூகம்பம் கடலுக்கு அடியில் 35 கி.மீ. ஆழத்தில் 6.9 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இதனால் சுனாமி எதுவும் ஏற்படாது என்கிறார் கோலின்ஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X